சென்னை: தமாகா தலைவர் ஜி.கே. வாசன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூர் மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி, சுமார் 9 லட்சம் மதிப்புள்ள வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், இயந்திரங்கள், மொபைல் போன்கள், மீன்கள் மற்றும் பிற பொருட்களை பறித்துச் சென்றனர்.

மத்திய அரசு இலங்கை அரசைத் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் பாதிக்கப்படுவதாகக் கடுமையாகத் தெரிவித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.