சென்னை: ஆந்திர கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் சில இடங்களில் இன்று மற்றும் நாளை பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
குறிப்பாக, கோவை மாவட்டம், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளிலும், நாளை வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனீ மழை பெய்ய வாய்ப்பு.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.