இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த நிலக்காற்று வீச வாய்ப்புள்ளது.
22-ம் தேதி வரை ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மாவட்டம் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும், நாளை நீலகிரி மாவட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில். மணிக்கு 40-55 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். தமிழகத்தில், நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சியில் 29 செ.மீ., கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லாரில் 18 செ.மீ., நீலகிரி மாவட்டத்தில் மேல்பவானியில் 17 செ.மீ., பார்சன்வேலி, பந்தலூரில் 13 செ.மீ., நீலகிரி மாவட்டத்தில் சோலையாறு, சின்கோனாவில் 12 செ.மீ., கோவை மாவட்டத்தில் விண்ட்வொர்த் எஸ்டேட்டில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.