ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பாடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 300 பேர் கொண்ட படகில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலுக்குச் சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 3 படகுகள், மீனவர்களின் வலைகள், 33 மீனவர்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வரும் 5ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக 800 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாது. 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்.
மேலும், இலங்கை அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு மீனவர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ராமேஸ்வரம் மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.