சென்னை: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பணிநீக்கம் செய்யக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு மனிதவள மேலாண்மை செயலாளர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அரசு ஊழியர்கள் மீதான புகார் தொடர்பான நடவடிக்கையை ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே முடிக்க வேண்டும். இல்லையெனில், நிர்வாக தாமதத்தைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும்.

ஓய்வு பெறும் நாளில் பணிநீக்கம் செய்யக்கூடாது. ஓய்வு பெறும் தேதிக்கு 3 மாதங்களுக்கு முன்பு ஏதேனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், போர்க்கால அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம்.
ஏதேனும் தவறு இருப்பது கண்டறியப்பட்டால், பணி இடைநீக்கம் செய்யப்படலாம்.