ராமேஸ்வரம்: நேற்று முன்தினம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 80 மோட்டார் படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
இரவில் தனுஷ்கோடி கடல் பகுதியில் இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்தனர்.

மீனவர்களை விரட்டியடித்து, முனியாண்டிக்குச் சொந்தமான மோட்டார் படகையும், அதிலிருந்து தங்கராஜ் (40), லிங்கம் (55), செல்வம் (55), இருளாண்டி (45) ஆகிய 4 மீனவர்களையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணைக்குப் பிறகு, 4 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.