சென்னை: ‘காலனி’ என்ற வார்த்தை பொது பயன்பாட்டிலிருந்தும் அரசு ஆவணங்களிலிருந்தும் நீக்கப்படும் என்று அறிவித்ததற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், துணைத் தலைவர் இமயம், உறுப்பினர்கள் ஆனந்தராஜா, ரேகா பிரியதர்ஷினி, செல்வகுமார், பொன்தோஸ், இளஞ்செழியன் ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி, ‘காலனி என்ற வார்த்தை பொது பயன்பாட்டிலிருந்தும் அரசு ஆவணங்களிலிருந்தும் நீக்கப்படும் என்று அறிவிப்பதன் மூலம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் நலனில் முதல்வர் அதிக அக்கறையுடன் செயல்படுகிறார் என்பது தெளிவாகிறது.
இதற்காக, தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.