சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3017 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 2913 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 3017 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 112.48 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 81.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.