தூத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், மாலை 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
தொடர்ந்து, காலை 6.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவருக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி அலை வாயுகந்தப் பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தை வந்தடைகிறார். அங்கு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தங்க மயில் வாகனத்தில் வலம் வந்து, வீதிகளில் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
தைப்பூச திருவிழாவையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் கடந்த சில நாட்களாக பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு குவிந்தனர். ஆலு குத்தியும், காவடி ஏந்தியும் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றி வருகின்றனர். திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் தாசில்தார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.