தஞ்சாவூர்: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச்சங்கம் சார்பில் உலகத் தாய்மொழி தின பேரணி நடந்தது.
தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் (பிப்21) “உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு” தமிழ் மொழியை போற்றும் வகையில் மாணவர்கள் இணைந்து பேரணியில் ஈடுபட்டனர்.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து தமிழவேள் உமா மகேஸ்வரனார் கரந்தைக் கலைக் கல்லூரி வரை பேரணி சென்றது. இதில் மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.