செங்கோட்டையில் சாதி சான்றிதழ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
தென்காசி செங்கோட்டை,
செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன், புத்தரை வண்ணார் சமூகத்தினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பூர்வீக தமிழர் விடுதலைக் கட்சி தலைவர் இசைவாணன் தலைமை வகித்தார். மாநில நிதித்துறை செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன் சிறப்புரையாற்றினார். இதில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலிவர்ணன், கடையநல்லூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் மூர்த்தி பேசினர். முடிவில் மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி நன்றி கூறினார்.