கேரளா உள்துறை செயலாளருக்கு விபத்து… மருத்துவமனையில் அனுமதி
திருவனந்தபுரம்,
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு உள்துறை செயலாளராக இருப்பவர் வேணு. இவர் இன்று தனது மனைவி சாரதா முரளிதரன் மற்றும் மகனுடன் காரில் சென்றார். இவர்களது கார் காயங்குளம் பகுதி அருகே சென்றபோது, லாரி ஒன்று மோதியது.
இதில் வேணு, அவரது மனைவி, மகன் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து, அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, பருமலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வருவதாக காயம்குளம் போலீசார் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.