May 6, 2024

பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்பு… கடந்த ஆண்டில் 3.3 கோடி பேர் வரை பாதிப்பு

வாஷிங்டன்,

கடந்த ஆண்டு பாகிஸ்தானில் பெய்த பருவமழையால் அந்நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நாட்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 1,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்பார்த்தது.

இதனிடையே, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளின்கனை நேரில் சந்தித்து பேசினார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, பாகிஸ்தானின் முதல் கட்ட வெள்ள நிவாரணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான நிதி உதவியை அமெரிக்கா ஒதுக்கியது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உணவு பாதுகாப்பு உதவியாக கூடுதலாக 100 மில்லியன் டாலர்களை அமெரிக்கா அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!