உலக நடன தினத்தை முன்னிட்டு, கடல் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ராமேஸ்வரத்தில் சிறுவர்களும் சிறுமிகளும் நீருக்கடியில் நடனமாடினர். ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 29 அன்று உலக நடன தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்வில், சென்னையின் ஓஎம்ஆர் காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்தின் மகள் தாரகை ஆராதனா (11) மற்றும் மாணவர் அஷ்வின் பாலா (14) ஆகியோர் நீருக்கடியில் நடனமாடினர். இது தொடர்பாக, தாரகை ஆராதனா மற்றும் அஷ்வின் பாலா கூறுகையில், “கடல் மாசுபாடு, கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு, நடனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நடன நடவடிக்கைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும், ராமேஸ்வரத்தில் உள்ள பாக் ஜலசந்தி பகுதியில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் விழிப்புணர்வு நடனத்தை நிகழ்த்தினோம் என்றனர்.”