May 18, 2024

பாகிஸ்தானிய உளவாளிகளுடன் தொடர்பு என்று சந்தேகிக்கப்படும் 10 பேர் கைது

நாகவன்,

அசாம் மாநிலத்தில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. இதைத்தொடர்ந்து நாகவன் நகர போலீசார் திங் மற்றும் பாததிரவ பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சுற்றிவளைப்பின் போது 10 சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் கைது செய்து வருகின்றனர். இவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிம் கார்டுகளை விநியோகம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 200 சிம்கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் இருந்து 200 சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். அவர்களில் பலர் இந்திய விசாரணை முகமைகளிடம் இருந்து தப்பிக்க, ஓ.டி.பி. எண்களை பாகிஸ்தானிய உளவாளிகளுக்கு அனுப்பி, அவர்களது எண்களை வாட்ஸ்அப்புடன் இணைக்க கோரியுள்ளனர்.

இதுபோன்று பலர் ஈடுபட்ட உளவு தகவல் கிடைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள், விசாரணை நடத்தும்படி போலீசாரிடம் தகவல் தெரிவித்து உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நகாவன் காவல் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்று உள்ளனர். வேறு விவரங்கள் எதனையும் அவர்கள் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!