கண்ணூர் அருகே காட்டு யானை சாலையில் ஒரு குட்டியை ஈன்றது
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் இருண்ட வனப்பகுதியில் நேற்று இரவு காட்டு யானைக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் யானை ஒரு குட்டியை ஈன்றது.
இந்த காட்சிகள் சாலையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
அதனை ஈன்றெடுத்த யானை பின்னர் தனது குட்டியை மற்ற யானைகளுடன் சேர்ந்து அருகில் உள்ள காட்டிற்கு தள்ளி விட்டது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.