பெண்களால் மட்டுமே இயக்கப்படும் ரேபிடோ பைக் சேவை: சென்னை மெட்ரோ அறிவிப்பு..!
தற்போது நாடு முழுவதும் ரேபிடோ பைக் சேவை இயங்கி வருவதால் குறைந்த கட்டணத்தில் பயணிகள் பைக்கில் பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பெண்களால் மட்டுமே இயக்கப்படும் ரேபிடோ பைக் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் உள்ள நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்கள் மட்டுமான ரேபிடோ பைக் சேவை இன்று தொடங்கியது. மெட்ரோ ரயில் சேவையை இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முதற்கட்டமாக அயல லாம்னு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அரசு கார்டன் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களுக்கான ரேபிடோ பைக் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்கள் இனி மகளிர் ரேபிடோ பைக் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது