May 2, 2024

சர்வதேச குத்துச்சண்டை – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர், வீராங்கனைகள்

50 கிலோ பிரிவில் இந்தியாவின் அனாமிகா, பிரான்சின் வாசிலாவை வீழ்த்தினார், ஆடவர் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் கோவிந்த் குமார் சஹானி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் . அனுபமாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

50 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் அனாமிகா 4-1 என்ற புள்ளி கணக்கில் பிரான்ஸ் வீராங்கனை வசிலாவை தோற்கடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை அனுபமா 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜெசிகாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

இதேபோல், ஆடவர் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் கோவிந்த் குமார் சஹானி 4-1 என்ற கணக்கில் ஜார்ஜியாவின் லூகா கப்லாஷ்விலியை வீழ்த்தினார். அவர் இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் ஷோடியோர்ஜோனை எதிர்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!