May 3, 2024

ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்… ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் பிரசாரம்

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., திரு.திருமகன் ஈவேரா அவர்கள் கடந்த 4ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா நவநீதன், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் நாட்கள் நெருங்கி வருவதால் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினர் கிழக்கு பிளாக் வீதிகளில் பேரணியாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இது குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும்.

ஈரோடு கிழக்கில் ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளமும் அதை ஆமோதித்தது. ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!