ஊழல் வழக்கில் இம்ரான் கானின் தண்டனையை நிறுத்தி வைத்தது பாக்., கோர்ட்டு
இஸ்லாமாபாத்: தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
அதை விசாரித்த தலைமை நீதிபதி அமீர் பரூக் மற்றும் நீதிபதி தாரிக் முகமது ஆகியோர், தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாக தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கான் எதிர்வரும் தேசிய தேர்தலில் பங்கேற்க இந்த தீர்ப்பு வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தண்டனை பெற்று ராவல்பிண்டி சிறையில் உள்ள இம்ரான் கான் விரைவில் ஜாமீனில் வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.