பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது
பொன்னியின் செல்வன் 2ம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதுடன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திட்டம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குவது. விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள பொன்னியின் செல்வன், லைக்கா தயாரிப்பில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படத் தொடருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் 1 கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி வைரலானது. பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மார்ச் 29-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட இசை விழா நடைபெறவுள்ளது இதில் திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.