கரீபியன் தீவில் குற்ற சம்பவங்களை தடுக்க அமெரிக்கா நிதி உதவி
நியூயார்க்: கரீபியன் தீவு நாடான ஹைதி உலகிலேயே அதிக குற்ற விகிதங்களைக் கொண்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹைட்டி அதிபர் மோயிஸ், சட்டம்-ஒழுங்கு பிரச்னை காரணமாக கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன் பிறகு, ஏரியல் ஹென்றி தற்காலிகமாக ஹைதியின் அதிபராகப் பொறுப்பேற்றார். நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்குப் போதுமான பொருளாதார வளங்கள் தங்களிடம் இல்லை எனவும் ஹென்றி ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி, ஹைதிக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது. கென்யாவுடன் இணைந்து ஹைதியில் படைகளை நிலைநிறுத்த அமெரிக்காவின் தலைமையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக ஆயிரம் வீரர்கள் சோதனை அடிப்படையில் களமிறக்கப்பட்டு ஹைதி ராணுவத்துடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவார்கள். மேலும், சர்வதேச நாடுகள் கவுன்சில் உறுப்பினர்களிடம் இருந்தும் உதவி கோரப்பட்டுள்ளது.