May 20, 2024

துப்பாக்கிச்சண்டையில் 4 போலீசார் பலி… அமெரிக்காவில் அதிர்ச்சி

அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 4 போலீசார் பலி… அமெரிக்காவின் சார்லோட் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் போலீசார் 4 பேர் கொல்லப்பட்டனர்.

கொலை வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர் சட்டவிரோதமாக ரைபிள் துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவரது வீட்டை சோதனையிட போலீசார் வாரண்ட் உடன் சென்றனர்.

அப்போது போலீசாரை நோக்கி அந்நபர் சரமாரியாக சுட்டதால், போலீசார் பதில் தாக்குதல் நடத்தி சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். அப்போது, யாரும் எதிர்பாரா வண்ணம் வீட்டில் இருந்த மற்றொரு நபர் போலீசாரை நோக்கி சுடத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

2 மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் 4 காவலர்கள் உயிரிழந்தனர். கவச வாகனம் மூலம் கதவை இடித்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த போலீசார் உள்ளே இருந்த பெண்ணையும், 17 வயது சிறுவனையும் கைது செய்து சுட்டது யார் என விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!