சீனா அணுசக்தி இல்லாமல் புதிய ஆயுதமாக ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதித்துள்ளது. சீன அரசின் கப்பல் கட்டும் கழகமான CSSC உருவாக்கிய இந்த ஆயுதம், ஹைட்ரஜன் நிறைந்த மெக்னீசியம் ஹைட்ரைடைப் பொருளை பயன்படுத்தி மிகப்பெரிய தீப்பிழம்பை உருவாக்குகிறது. இந்த பரிசோதனை சர்வதேச அணுசக்தி ஒப்பந்தங்களை மீறுவதாக விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.

இந்த வெடிகுண்டு 1,000 டிகிரி செல்சியஸ்க்கு மேலான வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டது. இந்த வெப்பம் இரண்டு வினாடிகளுக்கு மேலாக நீடிக்கும் என்றும் இது வழக்கமான வெடிபொருட்களை விட அதிகமாக இருக்கின்றது. 2 கிலோகிராம் எடையிலிருந்தாலும், அது நொடியில் பேரழிவை உண்டாக்கும் சக்தி கொண்டது. இது ராணுவ சொத்துகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு துல்லியமான தாக்குதல்களை நிகழ்த்தக்கூடியதாக இருக்கின்றது.
சீனா, ஹைட்ரஜனை ஆற்றல் மூலமாகப் பயன்படுத்தி அடுத்த தலைமுறை ராணுவ கண்டுபிடிப்புகளுக்கான தன்னை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பரிசோதனையைத் தவிர, மீத்தேனில் இயங்கும் இயந்திரங்கள் மற்றும் ஹைப்பர்சோனிக் அமைப்புகள் போன்ற மாற்று ஆயுதத் தொழில்நுட்பங்களிலும் சீனா கவனம் செலுத்துகிறது.
இந்த ஆயுதம் அணு ஆயுதங்களின் சுமை இல்லாமல் அதிக அழிவை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்படுகிறது. இந்த பரிசோதனை, எதிர்கால போர்களில் ஹைட்ரஜன் குண்டுகள் பயன்படுத்தப்படுவதாக எதிர்பார்க்கப்படும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, இது அணுசக்தி ஒப்பந்தங்களை புறக்கணிக்கும் வகையிலும் உள்ளது.
தைவான் மற்றும் இந்தியா-சீனா எல்லைகளில் புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் இந்த புதிய ஹைட்ரஜன் குண்டு சோதனை அண்டை நாடுகளின் பாதுகாப்பு பற்றிய கவலைகளை அதிகரிக்கக்கூடும். இதனால், அவர்கள் தங்கள் பாதுகாப்பு தயார்நிலையை மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.