இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார். திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய கவாஜா ஆசிப், “கட்டுப்பாட்டுக் கோட்டில் எந்த இடத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. தாக்குதல் (பஹல்காம் தாக்குதல்) குறித்து விசாரிக்க சர்வதேச விசாரணைக் குழுவை பாகிஸ்தான் ஏற்கனவே கேட்டுள்ளது.
அப்படி நடந்தால், தாக்குதலில் இந்தியா அல்லது வேறு ஏதேனும் குழு ஈடுபட்டதா என்பது தெளிவாகும். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் தெளிவாகும். ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளிலிருந்து பாகிஸ்தான் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் சமீபத்திய பயங்கரவாத அலை இந்தியாவின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து இயக்கப்படுகிறது.”

கடந்த மாதம் 22-ம் தேதி, ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா இந்த கொடூரமான தாக்குதலை நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தின் உளவுத்துறை அமைப்பு பயங்கரவாதிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வெளிப்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துதல், எல்லையை மூடுதல், வர்த்தகத்தை நிறுத்துதல் மற்றும் விசாக்களை ரத்து செய்தல் உள்ளிட்ட பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்தது. இந்திய விமானங்களின் வான்வெளியை மூடி வர்த்தகத் தடை விதித்து பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.