வாஷிங்டன்: இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸும் அக்டோபர் 2023 முதல் சண்டையிட்டு வருகின்றன. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் 20 அம்ச திட்டத்தை முன்வைத்தார். இது தொடர்பாக, இஸ்ரேல் அரசாங்கமும் ஹமாஸும் எகிப்திய நகரமான ஷர்ம் எல் ஷேக்கில் கடந்த 6-ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கின.
இஸ்ரேலிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ரோன் டெர்மர் தலைமையிலான குழுவும், ஹமாஸின் மூத்த தலைவர் காலீல் அல்-ஹய்யா தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் நேற்று ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. விளம்பரம் இஸ்ரேலிய அரசாங்கமும் ஹமாஸ் குழுவும் பாலஸ்தீன காசா பகுதியில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக, இரு தரப்பினரும் அமைதித் திட்ட ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அதன்படி, அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். பணயக்கைதிகள் அடுத்த திங்கட்கிழமை விடுவிக்கப்படலாம். இஸ்ரேலிய வீரர்கள் காசாவில் தீர்மானிக்கப்பட்ட எல்லைக் கடவைகளுக்குத் திரும்புவார்கள். இரு தரப்பினருக்கும் இடையே அமைதியை நிலைநாட்ட முதல் படி எடுக்கப்பட்டுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, கத்தார், எகிப்து மற்றும் துருக்கி ஆகியவை அமைதித் தூதர்களாகச் செயல்பட்டன. அந்த நாடுகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காசாவிற்கு மட்டுமல்ல, முழு மத்திய கிழக்குக்கும் அமைதி திரும்பும்.
இதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் நேற்று இரவு டெல் அவிவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காசா போரை நிறுத்த ஒருமனதாக உடன்பாடு எட்டப்பட்டது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்.
அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 12-ம் தேதி இஸ்ரேலுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் எகிப்துக்கும் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.