மும்பை: டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறக்க உள்ளது. ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் தனது கார் ஷோரூமை திறக்க டெஸ்லா திட்டமிட்டிருந்தது. அதன்படி, டெஸ்லா செவ்வாய்க்கிழமை இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறக்கும்.
மும்பையின் குர்லா பகுதியில் உள்ள ஆப்பிள் ஷோரூமுக்கு அருகில் 4000 சதுர அடியில் டெஸ்லா ஷோரூம் திறக்கப்படும். இந்த ஷோரூமிற்கான மாத வாடகை சுமார் ரூ. 35 லட்சம். இதற்கான ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு கையெழுத்திடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், சீனாவில் தயாரிக்கப்பட்ட டெஸ்லா கார்கள் மட்டுமே இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் என்று தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, டெஸ்லா டெல்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் தனது இரண்டாவது ஷோரூமை திறக்க திட்டமிட்டுள்ளது. அதிக இறக்குமதி வரிகள் காரணமாக இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனை செய்வது கடினம் என்று எலோன் மஸ்க் முன்பு கூறியிருந்தார்.
இதற்கிடையில், இறக்குமதி வரி 20 சதவீதம் குறைக்கப்பட்டு, டெஸ்லா கார்கள் விரைவில் இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.