புது டெல்லி: வேதாந்தா நிறுவனத்தின் அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகள் கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்துள்ளன. வேதாந்தா லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். அரசியல் கட்சிகளுக்கு பணத்தை நன்கொடையாக வழங்குவதில் வேதாந்தா லிமிடெட் முன்னணியில் உள்ளது.
கோடீஸ்வரர் அனில் அகர்வாலின் வேதாந்தா லிமிடெட், மார்ச் 2025-ல் முடிவடைந்த நிதியாண்டில் ஆளும் பாஜகவுக்கு நன்கொடைகளை கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்து ரூ.97 கோடியை நன்கொடையாக அளித்துள்ளதாக அதன் சமீபத்திய ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. 2024-25-ம் ஆண்டில் அரசியல் நன்கொடைகள் மொத்தம் ரூ.157 கோடியாக இருந்தன.

இது முந்தைய நிதியாண்டில் ரூ.97 கோடியாக இருந்தது. ஆளும் கட்சிக்கு நன்கொடைகள் அதிகரித்திருந்தாலும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு நன்கொடைகள் வெறும் ரூ.10 கோடியாகக் குறைந்துள்ளன.
2024-25-ம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையில், ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரையிலான நிதியாண்டிற்கான நன்கொடைகளில் பாஜகவுக்கு ரூ.97 கோடி (மார்ச் 31, 2024-ல் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.26 கோடி), பிஜு ஜனதா தளத்திற்கு ரூ.25 கோடி (மார்ச் 31, 2024-ல் ரூ.15 கோடி), ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ரூ.20 கோடி (மார்ச் 31, 2024-ல் ரூ.5 கோடி) மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.10 கோடி (மார்ச் 31, 2024-ல் ரூ.49 கோடி) ஆகியவை அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.