சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை அடுத்த பாளையங்கோட்டை கீழ்பாதியைச் சேர்ந்த கிஷோர் என்ற மாணவர் ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்த நிலையில், ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்த தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்த நிலையில், தடைசெய்யப்பட்ட பொருட்களை விநியோகித்ததற்காக அவரும் சக தமிழ் மாணவர் நித்திஷ் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது, உக்ரைனில் போரில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படுவதாக கிஷோர் தனது பெற்றோருக்கு அனுப்பியுள்ள செய்தி பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் படிப்பிற்காக சென்ற மாணவர்களை போரில் ஈடுபடுத்த ரஷ்ய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்கான சர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிரானது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமல்ல, ரஷ்யாவில் மருத்துவம் படிக்க தங்கள் குழந்தைகளை அனுப்பிய ஆயிரக்கணக்கான பெற்றோர்களும் மிகுந்த கவலையில் உள்ளனர்.
ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு உக்ரைன் போரில் ஈடுபட்ட 80 இந்தியர்கள் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் மீட்கப்பட்டு தங்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அதேபோல், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் உள்ளிட்ட மாணவர்களை மீட்டு தங்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.