மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான (ரெப்போ விகிதம்) வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றவில்லை. இதன் விளைவாக, ரெப்போ விகிதம் 5.5 சதவீதமாகவே உள்ளது. வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இந்த முடிவு ஆகஸ்ட் மாதம் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்டது. இதை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக ரெப்போ விகிதம் 6.50% ஆக இருந்த நிலையில், பிப்ரவரியில் அது 0.25% குறைக்கப்பட்டு 6.25% ஆக இருந்தது.

அடுத்த இரண்டு மாதங்களில் (ஏப்ரல்), இது மேலும் 0.25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6% ஆக இருந்தது. இந்த சூழ்நிலையில், ஜூன் மாதத்தில் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.5% ஆக இருந்தது. தற்போது, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழு கூட்டத்தில், ரெப்போ விகிதம் 5.50 சதவீதமாக மாறாமல் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார சூழல், அமெரிக்க வரி நடவடிக்கைகள், பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்றவற்றுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.