இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:- அரசு வங்கிகளின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் தலைவர்களில் எத்தனை பேர் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் என்பது குறித்து மக்களவையில் நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மொத்தம் 9 தலைவர்கள் மற்றும் மேலாண்மை இயக்குநர்களில் ஒருவர் கூட இந்த வகையைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறினார்.
மொத்தம் 98 இயக்குநர்களில் 6 பேர் பட்டியல் சாதியினர், ஒருவர் பட்டியல் பழங்குடியினர் மற்றும் ஒருவர் சிறுபான்மையினர், 12 பேர் பெண்கள். இதேபோல், எல்.ஐ.சி இயக்குநர்கள் குழுவின் 13 உறுப்பினர்களில் ஒருவர் பழங்குடியினர், ஒருவர் பெண், தலைவர் மேற்கண்ட பிரிவைச் சேர்ந்தவர் அல்ல.

பொது காப்பீட்டு நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் உள்ள 48 உறுப்பினர்களில் 5 பேர் பட்டியல் சாதியினர், 18 பேர் பெண்கள். இவர்களில் 6 பேர் பட்டியல் சாதியினர், 3 பேர் பெண்கள். அமைச்சரின் இந்த பதில் வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல. இது சாதி பாகுபாட்டின் வெளிப்பாடாகும்.
இது பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் எந்த அளவிற்கு இடஒதுக்கீடு இல்லாத பதவிகளில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு சான்றாகும். அரசு நிறுவனங்களின் கதி இதுதான் என்றால், தனியார் நிறுவனங்களின் நிலைமை என்னவாகும்? என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.