புது டெல்லி: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்: ரயில்டெல் பல்வேறு ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சாதனங்களை வழங்குகிறது.
மேலும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் 4G மற்றும் 5G மொபைல் போன் சேவைகளை வழங்கி வருகின்றன. தற்போது, நாடு முழுவதும் 6,115 ரயில் நிலையங்களில் ரயில்டெல் இலவச வைஃபை இணைய சேவையை வழங்கி வருகிறது.

டெல்லி, சூரத், அகமதாபாத், பானிபட், தன்பாத், சிம்லா, மங்களூர், யஷ்வந்த்பூர், தார்வாட், கோழிக்கோடு, திருவனந்தபுரம், எர்ணாகுளம், சென்னை சென்ட்ரல், புனே உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.