புது டெல்லி: மேற்கு வங்க வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதில் ஈடுபட்ட 5 அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் மேற்கு வங்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், மேற்கு வங்க அரசு 5 பேரில் 2 பேரை மட்டுமே பணிகளில் இருந்து விடுவித்து, வாக்காளர்களைத் திருத்தும் பணியில் ஈடுபட 2 புதியவர்களை நியமித்துள்ளது.

மீதமுள்ள 3 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில், தலைமைச் செயலாளர் மனோஜ் பந்த் இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் ஆஜராகி, அதிகாரிகளை நீக்கியது தொடர்பாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.