சத்தீஸ்கரில் பள்ளிகள் திறப்பு வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் கடும் வெப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 26 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய சத்தீஸ்கரின் உள்பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும், பலத்த காற்றுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் என ராய்ப்பூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டிக்குமாறு முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளிகள் 26ம் தேதிதான் திறக்கப்பட உள்ளது.