இன்று இரவு 8 மணிக்குள் பிபோர்ஜாய் புயல் கரையை கடக்கும்
அகமதாபாத்: இன்று மாலை 4 மணிமுதல் 8 மணிக்குள் பிபோர்ஜாய் புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு அரபிக்கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் இன்று மாலை 4 மணி முதல் 8 மணிக்குள் குஜராத்தில் சௌராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதியில் ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.