திருவனந்தபுரம்: கேரளாவின் எர்ணாகுளம் அருகே உள்ள பள்ளுருத்தியில் ஒரு கிறிஸ்தவ சபைக்குச் சொந்தமான ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அதில் 100-க்கும் மேற்பட்டோர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்று கூறப்படுகிறது.
ஆனால், அந்தப் பள்ளியில் ஹிஜாப் அணியத் தடை உள்ளது. இந்த சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி ஹிஜாப் அணிந்திருந்தார். ஆனால், மாணவி சீருடை அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறி, பள்ளிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதை அறிந்ததும், கம்யூனிஸ்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சி உறுப்பினர்கள் பள்ளி முன் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, நேற்று, மாணவியின் பெற்றோர், எர்ணாகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹைப் ஈடன் மற்றும் உயரதிகாரிகள் பள்ளி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி, தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், எர்ணாகுளம் அருகே உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் முஸ்லிம் மாணவியை வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார். ஹிஜாப் அணிய பள்ளி தடை விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, மத உரிமைகள் மற்றும் RTE சட்டத்தை காரணம் காட்டி, தடையை நீக்க கல்வி அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டார்.