தஞ்சாவூர்: தஞ்சாவூரில் திமுக வேட்பாளர் ராமநாதன் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் பிரமாண்டமாக இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்ொண்டார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக,அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6 மணி வரை பிரச்சாரம் செய்ய காலக்கெடு என்பதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்,
இதையடுத்து தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ராமநாதன் வல்லம் பகுதியில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் தொண்டர்கள் புடை சூழ திறந்த ஜீப்பில் சென்று தனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார், பிரம்மாண்டமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.