சென்னை: தமிழில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் கொண்ட கதையாக ரீமேட்ச் உருவாகியுள்ளது. இதில் நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று பாலா தெரிவித்துள்ளார்.
‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான KPY பாலா, தற்போது தனது இரண்டாவது படமான ‘ரீமேட்ச்’ திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் பூஜை விழாவில் கலந்து கொண்ட அவர், தன்னுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
அப்போது பேசிய பாலா, “ஜினிமா மீடியா மற்றும் இந்த திரைப்படக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி. தமிழில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் கொண்ட கதை உருவாகியுள்ளது. இந்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று என்னிடம் கதை கூறினார்கள்.
நான் உண்மையிலேயே பேட்மிண்டன் விளையாடிய அனுபவம் கொண்டவன் என்பது அவர்களுக்கு தெரியாது. நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்ததால், இந்தப் படத்திற்காக எட்டு மாதங்கள் பயிற்சி எடுத்து வருகிறேன். செல் முருகன் அண்ணனுடன் இணைந்து நடிப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.