அகமதாபாத்: உறுப்பினர் கடமைகளை கடுமையாக மீறியதன் காரணமாக கிரிக்கெட் கனடாவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதே நேரத்தில் மகளிர் கிரிக்கெட் வளர்ச்சி, உலகளாவிய போட்டி கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாக வலுப்படுத்தல் தொடர்பான பல்வேறு முடிவுகளும் எடுக்கப்பட்டன.
இடைநீக்க காலத்திலும் கனடிய தேசிய அணிகள் ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படும். ஆனால் ஐசிசி நிதி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய அணி திட்டங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.