வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா இன்று கொடியேற்த்துடன் தொடங்கியது. இத்திருவிழாவில் பங்கேற்க குவியும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கிய நிலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
10 நாட்கள் நடைபெற உள்ள திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் வேளாங்கண்ணி பேராலய நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றன.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் திருவிழாவிற்கு வருவதால் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.