பாஜக நிர்வாகி வீட்டில் தேர்தல் பறக்கும்படை சோதனை
திருவள்ளூர்: மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இன்று திருவள்ளூர் பாடிய நல்லூரைச் சேர்ந்த பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் வெங்கடேஷ் வீட்டில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினர். அவரது வீட்டில், வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை எனத் தெரிகிறது.