மும்பை: இந்தி திரையுலகின் பெண் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தி திரையுலகின் முன்னணி பெண் தயாரிப்பாளராக இருப்பவர் ஏக்தா கபூர். இவர் பிரபல இந்தி நடிகர் ஜிதேந்திரா, ஷோபா கபூர் ஆகியோரின் மகள் ஆவார். ஏக்தா கபூர் இந்தி படங்கள் மட்டுமன்றி வெப் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களும் தயாரித்து இருக்கிறார்.
இவருக்கு 2020-ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோர் தயாரிப்பில் காந்தி பாட்டி என்ற நிகழ்ச்சி ஓ.டி.டி தளத்தில் வெளியானது. அதில் மைனர் நடிகையின் ஆபாச காட்சிகள் இடம் பெற்று இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோர் மீது போலீசார் போக்சோ உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் தயாரிப்பாளர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து இருப்பது பரபரப்பாகி உள்ளது.