சென்னை: பராமரிப்பு பணி காரணமாக வேளச்சேரி இந்து சுடுகாடு எரிவாயு தகனம் இன்று முதல் 25-ம் தேதி வரை 20 நாட்களுக்கு மூடப்படும். இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-172-க்கு உட்பட்ட வேளச்சேரி இந்து சுடுகாடு எரிவாயு தகன நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மேற்கண்ட சுடுகாட்டில் உள்ள எரிவாயு தகனம், பிப்., 5 முதல் 25 வரை 20 நாட்களுக்கு மூடப்படும்.
எனவே, இந்நாட்களில் ஆலந்தூர் மண்டலம், வார்டு-163-க்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் மற்றும் அடையாறு மண்டலம், வார்டு-178-க்கு உட்பட்ட வேளச்சேரி பாரதி நகர் ஆகிய இடங்களில் உள்ள சுடுகாடுகளை பொதுமக்கள் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.