சென்னை: ஐஐடி மெட்ராஸில் உள்ள அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையம், இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸுடன் (சிஐஐ) இணைந்து சப்ளை செயின் மேனேஜ்மென்ட்டில் சான்றிதழ் படிப்பை மீண்டும் தொடங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் படிப்பின் கீழ் 40,000 வல்லுநர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
CII இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் பாடத்திட்டத்தில் உயர்நிலை கல்வி நிபுணத்துவத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் பாடத்திட்டத்தை மேம்படுத்த முயற்சிக்கிறது. ஐடி, இ-காமர்ஸ், சில்லறை விற்பனை, நுகர்வோர் பொருட்கள், சரக்கு அனுப்புதல் போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் வல்லுநர்கள் மற்றும் பொறியியல், வணிகம், அறிவியல் மற்றும் வணிக மேலாண்மைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் இந்தப் பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாடத்திட்டம் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்க உள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் <https://code.iitm.ac.in/supply-chain-management-professional-certification-scm-pro> என்ற இணையதளத்தின் மூலம் மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது.