பாக்தாத்: அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவத்தினருடன் நடைபெற்ற மோதலில், சிரியா மற்றும் ஈராக்கிற்கான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக ஈராக் பிரதமர் உறுதி செய்துள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வந்ததாக அறியப்படுகிறது. சிரியா என்ற நாட்டை அந்த அமைப்பினர் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். பின்னர், அமெரிக்காவின் தாக்குதலில் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு அவர்களின் ஆதிக்கம் குறைந்தது. இருப்பினும், அந்த அமைப்பினர் இன்னும் பல நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர்.
ஈராக் மற்றும் சிரியாவின் தலைவனாக கருதப்பட்ட அபு கதிஜா என அழைக்கப்படும் அப்துல்லா மகி முஸ்லே அல் ரிபியா, அந்த அமைப்பின் முக்கிய தலைவராக இருந்தவர். சர்வதேச தலைவராகவும் அவர் கருதப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் அந்த பயங்கரவாதி தலைவன் கொல்லப்பட்டுள்ளார். இதனை ஈராக் பிரதமர் முகமது ஷியா உறுதி செய்தார்.