குடும்பம் என்றாலே கணவன் – மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் இருக்க தான் செய்யும். ஆனால் சிலர் வீடுகளில் அது அதிகமாக இருப்பதால் என்ன செய்வதென தெரியாமல் இருப்பார்கள். சாணக்கியர் தனது சாணக்யா நிதியில் கணவனும் மனைவியும் தங்கள் திருமண வாழ்க்கையில் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை விளக்கியுள்ளார். இரவு தூங்குவதற்கு முன்பு கணவன் – மனைவி இந்த 5 விஷயங்களை செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
இரவு உணவை கணவனும் மனைவியும் ஒன்றாக சாப்பிட வேண்டும். முடிந்தால், இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறி கொள்வது அன்பை அதிகப்படுத்தும். இதன் மூலம் இருவருக்குள்ளும் காதல் அதிகரித்து, மரியாதையும் அதிகரிக்குமாம். உங்கள் துணையின் விருப்பத்தை ஒரு போதும் புறக்கணிக்காதீர்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் இருவருக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்கலாம். எனவே உங்கள் துணையின் விருப்பத்தை இரவுக்குள் செய்து விடுங்கள்.
இரவு தூங்குவதற்கு முன்பு கணவன் – மனைவி நேரம் ஒதுக்கி பேசிவிட்டு உறங்க வேண்டும். ஏனென்றால் நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் பெரிதாக பேசியிருக்கமாட்டார்கள். இதனால் கேப் அதிகமாக இருக்கும். அதை ஈடு செய்ய இரவில் நன்றாக சிரித்து பேசிவிட்டு படுக்கைக்கு சென்றால், அன்பு பலப்படுமாம்.
உங்கள் துணைக்கு அந்த நாளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ, உங்களுடன் பிரச்சனை இருந்தாலோ, அதை சரி செய்துவிட்டு சமாதானம் ஆன பிறகு தூங்குவது நல்லதாகும். படுக்கை அறைக்குள் நுழைந்தவுடன் கணவன், மனைவி இருவரும் அன்பை வெளிப்படுத்துவது அவசியமாகும். ஒருவரையொருவர் தழுவி கொண்டு தூங்குவதன் மூலம் உங்கள் பந்தம் வலுப்பெறும் என சொல்லப்படுகிறது.