பெங்களூரு: பெங்களூரு ஹெப்பாலில் சிந்தி உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 7-ம் வகுப்பு மாணவர்களின் பாடப்புத்தகத்தில், சிந்தி மொழி பேசும் மக்களின் கலாச்சாரத்தை விளக்கும் பாடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தமன்னா பற்றிய குறிப்புகள் உள்ளன. இதையறிந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளியின் வாட்ஸ் அப் குரூப்பில் பாலியல் தொடர்பான பாடம் குறித்து கேள்வி எழுப்பினர்.
உரிய பதில் கிடைக்காததால், பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து விளக்கம் கேட்டனர். பள்ளி நிர்வாகம் அளித்த விளக்கத்தை பெற்றோர் ஏற்க மறுத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த பெற்றோர்கள் கர்நாடக பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் புகார் அளித்தனர்.
அதில், ”சம்பந்தப்பட்ட மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், அகற்ற வேண்டும்” என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், பாலினம் தொடர்பான பாடத்தை நீக்காவிட்டால் தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றுவோம் என சில பெற்றோர்கள் எச்சரித்துள்ளனர்.