24 மணி நேரத்தில் 117 குழந்தைகள்… இஸ்ரேலின் தாக்குதலால் பலி
இஸ்ரேல்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 19 நாளாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை காசா முனை மீது தொடங்க தயாராக உள்ளது.
இதனால் காசாவின் எல்லை பகுதியில் தங்கள் படைகளை அதிக அளவில் இஸ்ரேல் குவித்து வைத்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் காசாவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் மேற்கொண்ட இந்த தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 117 குழந்தைகள் உட்பட 266 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது