May 10, 2024

கடந்த மாதம் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 85.50 லட்சம்

சென்னை: கடந்த அக்டோபரில் 85.50 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து கொண்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 117 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்து உள்ளது:நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும், மே மாதத்தில் 72,68,007 பயணிகளும், ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும், ஜூலை மாதத்தில் 82,53,692 பயணிகளும், ஆகஸ்டு மாதத்தில் 85,89,977 பயணிகளும், செப்டம்பர் மாதத்தில் 84,37,182 பயணிகள் மற்றும் அக்டோபர் மாதத்தில் 85,50,030 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்து உள்ளனர். இதையடுத்து அதில் அதிகபட்சமாக 20.10.2023 அன்று 3,60,743 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2023, அக்டோபர் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 34,20,155 பயணிகள் (Online QR 2,07,097; Static QR 96,913; Paper QR 25,52,323; Paytm 3,53,003; Whatsapp – 2,10,819), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 42,16,831 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 2,51,955 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 7,928 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 6,53,161 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மேலும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட் மற்றும் Paytm App போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத்தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை சுத்தமாவும். சுகாதாரமாகவும் பராமரிப்பதில் பெரும் ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி எனதெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!