கிராம்பின் பயன்கள் என்னென்ன?
கிராம்பு நன்மைகள் ஏராளம். கல்லீரல் பாதுகாப்புக்கு சிறந்தது. வயிற்றுப்புண்களையும், வாய்ப்புண்களையும் ஆற்றக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வாய் துர்நாற்றம் ஏற்படாது.. நாள் முழுவதும் புத்துணர்வு கிடைக்கும்.. அஜீரணம் நீங்கும்.ஜலதோஷம், சளிக்கு நிவாரணம் தரக்கூடியது. பல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் இந்த ஒரே ஒரு கிராம்பு நீக்கிவிடும்.
பற்களில் வலி, ஈறுகளில் வீக்கம், போன்றவைகளை கிராம்பு தீர்க்கக்கூடியது.. பல் வலி மட்டுமல்ல, காது வலி என்றாலும்கூட, இந்த கிராம்பு எண்ணெய்தான் பயன்படும்.. அதனால்தான், பற்பசைகளில் முக்கிய மூலப்பொருளாக இந்த கிராம்பு இடம்பெற்றுள்ளது. தலைவலி என்றாலும்கூட, இந்த கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்தலாம். எலும்பு அடர்த்தியை அதிகரிக்கவும் கிராம்பு உதவுகிறது.
ஜீரண கோளாறை நீக்கும் சக்தி அபரிமிதமாக உள்ளதால்தான், அசைவ உணவுகளில் கிராம்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள். எனினும் எல்லாவிதமான மசாலாக்களுடன் சேர்க்க கூடாதாம்.. கிராம்பு எண்ணெயை நேரடியாக சருமத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்பார்கள்.. ஆனால், முகப்பருவின் மேல் தடவினால் பலன் கிடைக்கும்.